Wednesday, October 3, 2012

இஞ்சி மருத்துவ குணங்கள்:-

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
இஞ்சியை உணவில் சேருங்கள்:
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது.
சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை



Saturday, August 18, 2012


உடல் எடையை குறைக்க தினமும் ஒரு வேகவைத்த முட்டை




அழுத்தி பிடித்தால் உடைந்துவிடும் மெல்லிய ஓடுஆடையின் உள்ளே மொழு மொழு மஞ்சள்,வளவளப்பான வெள்ளை என கவர்ச்சிகரமாக கூட்டணியில் ஏகத்து சத்துக்களை பொக்கிஷமாக குவித்து வைத்திருக்கும் பெட்டகம் தான் முட்டை!

மூளை வளர்ச்சிக்கு முட்டை:-
கொழுப்பு போன்ற இரண்டுவகையான சமாச்சாரங்கள் தான் (Phosphatidylcholine and sphingomyelin) மூளையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து மூளையின் செயல்பாட்டையும்நலனையும் பாதுகாக்கும் ஆட்சி பொறுப்பை  செய்கிறதுஅந்த பணிக்கு சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்யும் (methylation)  பணிக்கு முட்டையில்  உள்ள கொளின் (Choline)  “மூளையாக செயல்படுகிறது. மேலும் நரம்பு மண்டலத்திலிருந்து தசைகளுக்கு தரப்படும் சமிக்கை உத்திரவுகளை கொண்டு சேர்க்கும் காதல் தூதுவன் அசிட்டைல்கோளின் அவர்களின் மூலப் பொருளாகவும் இருக்கிறது.  சத்துணவில் முட்டை நமது வருங்காலத்தின்  விதை! அதொடி ஒமேக்கா 3கொழுப்புஅத்தியவசிய அமைனோ அமிலங்கள்விட்டமின்கள் ஏடிபி2 ,பி1,பி12 , புரதம்மாவு  சத்துபல தாதுஉப்புக்கள் என பல குவியல்களை உள்ளடக்கியது முட்டை!
ஆஃப் பாயில் முட்டை:-

மெல்லிய வெண்மை நிற விரிப்பில் மெத்தென புடைப்பாகவும் பளபளப்பாகவும் மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாகவும் ஆங்காங்கே கருப்பு கீற்றுகளும் ஒருங்கிணைந்த அதை லாவகமாக கையாண்டு ஒரே சுருட்டில் வாயினுள் நுழைத்து சுவைக்கும் போது பெப்பரின் வாசனையும்முட்டையின் மென்மையான  சுவையும் அருமை அருமைஉடல் எடையை அதிகரிக்ககட்டுமஸ்தான உடலாக கொண்டுவர பலராலும் சாப்பிடப்படுகிறதுசாலமனோலா என்ற  கிரிமிகள் பாதிக்கபட்ட கோழியிடமிருந்து பெறப்பட்ட முட்டையில் இந்த கிரிமிகள் இருக்க வாய்ப்புள்ளது. இது மனிதர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளதுமேலும் தோல் சம்மந்தப்ட்ட வியாதிகளும் வரவாய்ப்புள்ளது. புகைப்பிடித்தல் பழக்கம் உள்ளவர்கள் பச்சை முட்டையையோ அல்லது ஆஃப் பாயில் முட்டையை சாப்பிடுவதை தவிர்க்கவும்மூச்சு திணறல் அறிகுறி தோன்றலாம்!
நன்றாக வேக வைத்த முட்டை:-
முட்டையில் 211 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது என்றாலும் முட்டையில் உள்ள லெசித்தின் என்ற பொருள் உடல் கொலஸ்ட்ராலை கிரகிப்பதை தடைசெய்து விடுகிறது எனவும் கொலஸ்ட்ரால் நன்றாக  வேகவைக்கப்படும்போது ஆக்ஸிடேசன் ஆகி கொலஸ்ட்ரால் என்ற பூச்சாண்டியை துரத்திவிடுகிறது எனவும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகின்றது.
முட்டையை வேக வைப்பது எப்படி?
எத்தனை முட்டைகளை வேக வைக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் ஒரு பாத்திரத்தை தெரிவ செய்து அதில்  முட்டைகளை  போட்டு முழுகும் வரை தண்ணீரை ஊற்றவேண்டும். முட்டைகளை நெருக்கமாக அடுக்க கூடாதுகொதிக்கும் போது ஒன்றோடு ஒன்று மோதி  உடைந்துவிடும். முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் முட்டை அடங்கிய பாத்திரத்தை வைத்து அதில் உள்ள தண்ணீர் கொதிக்கும் நிலை வரும் வரை காத்திருந்து பாத்திரத்தை ஒரு மூடி கொண்டு மூடிவிட்டு ஸ்வாலையை குறைத்து வைத்து 12 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பெரிய முட்டைகளாக இருந்தால் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.பின் குளிர்ந்த நீருக்கு முட்டைகளை மாற்றி குளிரவைத்து ஓட்டினை உரித்து உஜாலா போடாமலேயே பளிச்சிடும் வெண்மையில் உள்ள முட்டையை சாப்பிடலாம்.
பாத்திரத்தில் போடும் முன் முட்டையில் கெட்ட வாசனை உணர்ந்தால் அதை பயன்படுத்தக்கூடாது.
முட்டையில் வெடிப்புகீரல் இருந்தால் அதையும் விலக்கவேண்டும்.
ஒரு சமமான தரையில் முட்டையை சுழலவிட்டால் ஒரே சீராகா சுற்றாமல்  தடுமாறினாலும் அது கெட்டுபோனதாக இருக்கலாம்.
தண்ணீருக்குள்  மூழ்காமல் மிதக்கும் முட்டைகளை விலக்கவேண்டும்.
தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் முட்டையிலிருந்து குமிழ்கள் வெளிப்பட்டாலும் அந்த முட்டைகள் பயன்படுத்தக்கூடாதுமுட்டையில் கீரல் உள்ளது என்ற அடையாளம்!
முட்டையின் ஓடு கெட்டியாக  இல்லாமல் ரப்பர் போல் இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது.
நன்றாக வேக வைத்த முட்டையும் கலோரியும்:-
வேக வைத்த முட்டையில் அனைத்து சத்துகளும் குறைவில்லாமல் உள்ளது. 77.5 கலோரிகள்,, 5 கிராம் கொழுப்பு, 1.5 கிராம் செச்சுரேட்டடு கொழுப்பு, 190 மில்லிகிராம் கொலஸ்ட்ரால், 55 மில்லி கிராம் சோடியம், 1கிராம் மாவுசத்து, 1கிராம் இனிப்பு சத்து, 6 கிராம் புரதச்சத்து, 20 மில்லிகிராம் சுண்ணாம்பு சத்து என அடுக்கி கொண்டே போகலாம்.
நன்றாக  வேகவைத்த முட்டையில் 77.5 கலோரிகள் எரிப்பொருள் உள்ளதுஇந்த முட்டையில் அனைத்து சத்துக்களையும் கிரகிக்க  நமது உடல் 100 கலோரிகள் மேல் எரிப்பொருள் செலவழிக்கிறதுஎனவே நன்றாக வேகவைத்த முட்டை சாப்பிடும் போது நமது உடல் எடை குறைகிறது என்கிறது ஆராய்ச்சி!


பெண்களே! தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்!



ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 விஷயங்கள்...


1. ஆரோக்கியமாக இருங்கள்

முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.

2. சரியான விதத்தில் சாப்பிடுங்கள்

மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

3. தீய பழக்கங்கள் கூடாது

புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

4. சரியான நேரம்

ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.

5. பாலியல் அறிவு அவசியம்

படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

6. உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்

கர்ப்பம் தரிக்கும் பெண் உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.


கரு முதல் குழந்தை வரை...





கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாதமும் 7 நாட்களும் என்று கணக்கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படுகிறது. முதல் ட்ரைமாஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம்


1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறுநீரைப் பரிசோதித்து முதலில் கருவுற்றிருக்கிறார்களா? என்பது உறுதிசெய்யப்படுகிறது.

2. அடுத்தபடியாக ‘முத்துப் பிள்ளை’ போன்ற அபாயகரமான, தாயின் உயிருக்குப் பலத்த சேதத்தை விளைவிக்கக் கூடிய கர்ப்பகால நோய்கள், இந்தச் சிறுநீர் பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டு ஸ்கேன் மூலம் உறுதி செய்து காலி செய்ய ஏதுவாகிறது.

3. கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுப் பதிவு செய்யப்படும் போதே அவருடைய இரத்தக் கொதிப்பு, எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏதுவாகிறது.

4. சோகையான பெண்களுக்கும், இந்த ஆரம்ப காலப் பரிசோதனையிலே வார ஊசிகளாகச் சத்து ஊசிகளும் போட்டு அவர்களை, இரத்த சோகையின் காரணமாக ஏற்படும் இடர்ப்பாடுகளில் இருந்து ‘வருமுன் காப்போம்’ முறைகளை கடைப்பிடித்துக் காப்பாற்ற முடிகிறது.

5. அதிக வாந்தி, மயக்கம், ருசியில் மாறுதல் போன்ற ‘மசக்கை’ என்று கூறக்கூடியதானது, சில பெண்களுக்கு இந்த கால கட்டத்தில் அளவுக்கதிகமாகவே இருப்பதுண்டு. அதற்கான மருந்துகள் இருப்பதால் அவர்கள் சோர்வடையாமலும் அதனால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படாமலும் பாதுகாக்க முடிகிறது.

6. முதல் 12 வாரங்களில் தான், கருவானது குழந்தையாக முழுவளர்ச்சி பெறுகிறது. அதன்பின் அதன் அளவுதான் பெரிதாகிறது. அதனால் வளர்ச்சிப் பரிமாணமானது இந்த 12 வாரங்களுக்குள் நடைபெறுவதால் 1. போதிய கவனிப்பு, 2. தரமான உணவு, 3. சுகாதாரமான தண்ணீர், 4. நல்ல ஓய்வு, 5. மருத்துவரின் கண்காணிப்பு இந்த சமயத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது. கர்ப்ப காலத்தில் பொதுவாக 3 முறை ஸ்கேன் அவசியமாகின்றது.

90வது நாள் (முதல் ட்ரைமாஸ்டர்) முடியும் பொழுது

1. குழந்தையாக கரு உருப் பெற்றுவிட்டதை உறுதி செய்ய
2. ‘முத்துப்பிள்ளை’ போன்ற உயிருக்கு ஆபத்தான கரு வளர்ச்சியைக் கண்டறிய
3. கர்ப்பப்பையிலும், கருவிலும் உள்ள மற்ற குறைபாடுகளைக் கண்டறிந்து குணப்படுத்த


150வது நாள் (20வது வாரத்தில்)

1. குழந்தை வளர்ச்சியைக் கண்காணிக்க
2.பிறப்பிலேயே ஏற்படக்கூடிய குறைபாடுகளைக் கண்டறிந்து மிகவும் ஆபத்தான குறைகள் என்றால் மருத்துவ முறைப்படி வளர விடாமல் வெளியேற்ற
3. குழந்தை வளரும் கர்ப்பப்பை சூழ்நிலைகளை, தன்மைகளைக் கண்டறிய

9வது மாதத்தில்

1. குழந்தையின் இருப்பிடம்,

2. தண்ணீர்ச்சத்து,

3. நஞ்சின் இருப்பிடம்,

4.தலை இறங்கியிருக்கும் அளவு,

5.பிரசவம் ஆகக் கூடிய தேதி

6.குழந்தையின் எடை போன்றவற்றைக் கண்டறிவதின் மூலம் குழந்தை பிறக்கும் வழியையும் (Nature of Delivery) தேதியையும் ஓரளவு கணிக்க முடிகிறது.

நவீன மருத்துவக் கருவிகளிலேயே இந்த “ஸ்கேன்”, மகளிர் மகப்பேறு மருத்துவத்தில் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது.

பிரசவ சமயத்தில் பிரசவம் 12 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தாலோ, குழந்தையின் துடிப்பு உணரப்படவில்லை என்று பெண்மணிகள் கர்ப்பக் காலத்தில் மருத்துவரைச் சந்திக்க வந்தாலோ, குழந்தைக்கு இருதயத் துடிப்பு இருக்கிறதா என்று இந்த ஸ்கேனர் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

இருதயத் துடிப்பை ஈ.ஸி.ஜி. போன்று ஸ்கேனர் அழகாகப் பதிவு செய்து கொடுக்கும்.

இருதயத் துடிப்பு அதிகரித்தாலோ, மாறுதல்கள் இருந்தாலோ அது குழந்தையின் மூச்சுத் திணறுதலைச் சுட்டிக் காட்டுவதால், உடனடியாக அதற்கான வைத்தியமுறைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையைக் காப்பாற்ற ஏதுவாகிறது.

முந்தைய காலம் போல் அல்லாது ஒன்றிரண்டு குழந்தைகளே இன்றைய குடும்பம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் அவற்றை நன்முறையில் கர்ப்பக் காலத்தில் தாய் சேய் நலத்தைப் பேணி, மிகவும் சாதாரண அறுவை சிகிச்சை இல்லாத முறையில் பெற்றெடுப்பதற்கு இந்த கர்ப்பக் கால பராமரிப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.

தொகுப்பாக, இந்த 12 வாரங்களில் கரு குழந்தையாக உருப்பெறுவது நடைபெறுவதால் நல்ல ஊட்டச்சத்தும், ஓய்வும் மருத்துவக் கண்காணிப்பும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.

இரண்டாவது ட்ரை மாஸ்டர் (இரண்டாவது 12 வாரங்கள்)

கரு குழந்தையான பின் ஏற்படும் வளர்ச்சிதான் இந்த இரண்டாவது 12 வாரங்களில் நடைபெறுகிறது. இதில், பொதுவாக முதல் ட்ரைமாஸ்டரைப் போன்ற மிகவும் ஆபத்தான இடர்ப்பாடுகள் ஏற்படுவதில்லை.

இந்த இரண்டாவது ட்ரை மாஸ்டரில்

1. இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகிறது.
 18 வது வாரம்
 26 வது வாரம்
2. சத்து மாத்திரைகள் இரும்புச்சத்து, கால்சியம் சத்து (சுண்ணாம்புச் சத்து) போலிக் ஆசிட்.
3. மார்பகத்தைச் சோதனை செய்து, உள்ளடங்கிய காம்பு உள்ளவர்களுக்கு எளிய பயிற்சி கொடுத்து அதை வெளியில் திருப்பினால்தான் பிரசவத்திற்கு பின் தாய்ப்பால் கொடுக்கும்பொழுது சிரமம் இல்லாமல் இருக்கிறது.
4. மிகவும் இரத்தசோகையுடன் இருப்பவர்களுக்கு

1.இரும்புச் சத்து ஊசிகளும் 2. இரத்தமும் கூட ஏற்றப்பட்டு, அவர்கள் ஆபத்தில்லா பிரசவத்திற்கு தயார் செய்யப்படுகிறார்கள்.

மூன்றாவது ட்ரைமாஸ்டர் (24வது வாரம் முதல் 40வது வாரம் வரை)


அதாவது அந்த மூன்றாவது ட்ரைமாஸ்டர் என்பது பிரசவத்தின் தன்மையை நிர்ணயிக்கக் கூடிய முக்கியமான காலகட்டமாகும். இந்தக் கட்டத்தில்

1. மூளை வளர்ச்சி அதிகம் ஏற்படுகிறது. இது 1 வயது வரை தொடர்கிறது.

2. குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

3. நரம்பு மண்டலங்கள் பலப்படுகின்றன.

4. அசைவுகள் அதிகம் ஏற்படுகின்றன.

5. இருதயத் துடிப்பு சீராகிறது.

6.கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் முழுவளர்ச்சி அடைகின்றன.

7. பிறப்பு உறுப்புகள் தெளிவாக ஸ்கேனிங்கில் தெரிய ஆரம்பிக்கின்றன.

8. எலும்பு வளர்ச்சி அடைகிறது செறிவடைகிறது.

9. இரத்த ஓட்டம் சீராகிறது.

10. குழந்தை கருப்பையினுள் சுற்றி வருகின்றது.

40வது வாரம் நெருங்கும் பொழுது

1. குழந்தையின் தலை கீழே, திரும்பி, இடுப்பு எலும்புக் கூட்டுக்குள் இறங்கி விடுகிறது. அவ்வாறு இறங்கினால் தான், இயற்கையான முறையில் பிரசவமாவதற்கு ஏதுவாகிறது.
2. தகுந்த தண்ணீர்ச் சத்து குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. அது குறையும் பொழுது குழந்தையின் உயிர்த் துடிப்பிற்கே ஆபத்தாகிறது.
3. தாயின் இரத்த அழுத்தம் இந்தச் சமயத்தில் சீராக 120/80ல் இருக்க வேண்டும்.

சிலருக்கு 40வது வாரம் நெருங்கும் பொழுதுதான்...

 1. அதிகமான வீக்கம், கை, கால், முகங்களில் ஏற்படுகிறது.
 2. உப்புச் சத்து அதிகரிக்கிறது.
 3. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது.
 4. மூச்சுத் திணறல் உண்டாகிறது.
 5. அளவுக்கதிகமான வியர்வை
 6. இருதய படபடப்பு.
 7. தூக்கமின்மை உண்டாகிறது.

இதைத்தான் (“TOXAEMIA OF PREGNANCY”) கர்ப்ப காலத்தில் உடலில் விஷமாக மாறிவிடக்கூடிய கர்ப்பம் என்று கூறுகிறோம்.

ஆகவே,கர்ப்பகால பராமரிப்பு ஒவ்வொரு கருவுற்ற தாய்க்கும் மிகவும் இன்றியமையாததாகும்.